Untitled Document
இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயதங்களை அரச தரப்பினரிடம் ஒப்படைப்பதானது, தங்களை தாங்களாகவே அழித்து கொள்ளுவதும், தங்களின் சுயாதிபத்தை மகிந்த அரசிடம் அடைவு வைப்பதற்குரியதுமான ஒரு செயலாகும். ....சுதந்திரபுரத்தில் அப்பாவி மக்களை இலக்குவைத்த புலிகளின் தற்கொலைத் தாக்குதலுக்கு சிறீ ரெலோ வன்மையாகக் கண்டித்துள்ளது...........யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு : .........எமது இயக்க உறுப்பினருக்கு எதிரான கொலை வெறித் தாக்குதலை சிறீ-ரெலோ வன்மையாகக் கண்டிக்கிறது.......காஷ்மீருக்கும் மக்களுக்கும் விடுதலை - அருந்ததி ராய் ........... ஊடகங்களில் முஸ்லீம்கள் - ச.பாலமுருகன
ஓட்டுக்குழுக்களை விழுங்கி வரும் அரச பாசிசம்
இலங்கை அதிபயங்கரமான பாசிச சூழலுக்குள் நகர்கின்றது. அரசு எதை நினைக்கின்றதோ, அதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதை மீறுபவர்கள் அனைவரும், இந்த அரசின் பாசிசப் பயங்கரவாதத்தை நடைமுறையில் எதிர்கொள்ள வேண்டும்.இதுதான் இன்று இலங்கையின் நிலை. இதற்கு வெளியில் யாரும் சுதந்திரமாகவில்லை. ஜனநாயகமோ, இதை அனுசரித்துச் செல்லுகின்றது.பாசிசப் பயங்கரவாதத்துக்கு அஞ்சி, தன்னைத்தான் அதற்கு இசைவாக மாற்றிக்கொள்வது தான், உயிருடன் இருப்பதற்கான அரசியல் உத்தரவாதமாகும். அரச பாசிசத்துக்கு ஏற்ப, சமூகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும். இதுதான் நாட்டின் நடைமுறைகளும், சட்டங்களும்.
இதற்கமைய மக்கள்விரோத ஓட்டுக் குழுக்களை, தன்னுடன் இணைந்து தமிழ்மக்களை ஒடுக்கக் கோருகின்றது. புலிகளின் பாசிப் பயங்கரவாதத்தின் போது உருவான தமிழ் ஓட்டுக் குழுக்கள், தம் மக்கள் விரோத அரசியலுடன் பேரினவாத பாசிசத்துக்கே எப்போதும் துணைபுரிந்து வந்தனர். இன்று புலிகள் இல்லையென்ற நிலையில், இந்த ஒட்டுக்குழுக்களை தன்னுடன் இணை அல்லது தன்னுடன் இல்லையென்றால் சுயமாக செயல்பட முடியாது என்கின்றது அரச பாசிசம்.
இதைத்தான் முன்பு புலிகள் செய்தனர். மேலும்........
Updated 07--06--09
தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்களின் தலையீடு ஏன்?

அபு சுலைமான். பகுதி-1

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை உள்நாட்டு பிரச்சினையின் வடிவில் இருந்து சர்வதேச பிரச்சினையின் வடிவமாக இலங்கை அரசாலும்,தமிழ் இயக்கங்களாலும் மாற்றியமைக்கப்பட்டது. தேசிய இனப் பிரச்சினையின் முக்கிய மையம் தேசிய இனங்களுக்கு சமத்துவ அந்தஸ்த்து மறுக்கப்பட்டமையாகும்.ஆனால் தேசிய இனப்பிரச்சினையில் சர்வதேசங்கள் மூக்கை நுழைப்பதற்கான மையம் இலங்கையின் அமைவிடமும்,திருகோணமலை இயற்கைத் துறைமுகமும்,இயற்கை வளங்களும்,பிரித்தானியா அமைத்த எண்ணெய்க் குதங்களுமேயாகும். மேலும்........

இன்றைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயதங்களை அரச தரப்பினரிடம் ஒப்படைப்பதானது, தங்களை தாங்களாகவே அழித்து கொள்ளுவதும், தங்களின் சுயாதிபத்தை மகிந்த அரசிடம் அடைவு வைப்பதற்குரியதுமான ஒரு செயலாகும்.
-கி.பாஸ்கரன்-
தமிழ் மக்கள் விடுதலை புலிகள் அமைப்பு தமது இராணுவ பிரிவை கலைத்து நேற்று (07.03.2009) அரச தரப்பினரிடம் ஆயுதங்களை ஒப்படைப்பதாக செய்திகளும், படங்களும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. தமிழ் மக்கள் விடுதலைபுலிகள் அமைப்பினர் முழுமையாக தாங்கள் வைத்திருக்கும் ஆயுதங்களை ஒப்படைத்தர்களா அல்லது இல்லையா என்பதை அரச தரப்பினர்தான் உறுதிப்படுத்தவேண்டும்.எது எப்படியானாலும் எனிவரும் காலங்களில் கிழக்கு மாகாணத்தில், குறிப்பாக மட்டக்களப்பில் கொலைகள், ஆட்கடத்தல்கள், கப்பம் வாங்குதல் போன்றசெயல்கள் முற்றாக ஓழிக்கப்பட்டு அங்குள்ள மக்கள் சுதந்திர புருசர்களாக வாழவேண்டும் என்பதே கிழக்கு மாகாண மக்களின் அபிலாசைகளாகும் மேலும்........
Updated 10--03--09  
சிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்
ஐரோப்பா பிற கண்டங்கள் மீது புனிதப்போரை ஆரம்பித்து பல வருடங்களாகி விட்டன. இந்தப்போரின் நோக்கம் மதம் பரப்புவதல்ல, மாறாக லிபரலிசம்(அல்லது தாராளவாதம்) என்ற சித்தாந்தத்தை பரப்புவது. அதற்கு காரணம், தாம் மட்டும
உலகில் சிறந்த நாகரீகத்தை கொண்டிருப்பதாக நம்புவது. இந்தக் கருத்து, முதலில் நவநாசிகள், நவபாசிஸ்டுகள் என்று ஆரம்பித்து, வலதுசாரி ஜனநாயக கட்சிகளிலும் எதிரொலிக்கின்றது. சில புத்திஜீவிகள், வெகுஜன ஊடகங்கள் தனது வாத திறமையால் பெரும்பான்மை மக்களை கவர்கின்றனர். மேலும்........
Updated 28-11-08
 
யார் இந்த யூதர்கள்? - ஒரு வரலாறு :
“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது. 19 ம் நூற்றாண்டில் ஐரோப்பிய கண்டத்தில் உருவான தேசியவாத எழுச்சியின் எதிர்வினையாகத் தான், சியோனிச அரசியல் அமைப்பு உருவானது. அவர்களது அரசியல் ஒரு மத நூலான பைபிளை அடிப்படையாக கொண்டிருந்தது. (யூத மதத்தவரின் புனித நூலான “தோரா", கிறிஸ்தவர்களால் பைபிளில் “பழைய ஏற்பாடு"என்ற பெயரில் இணைக்கப்பட்டது.) மேலும்........
Updated 24-11-08
ஊடகக் கிரிமினல்கள்
பி.இரயாகரன்.

மனித அவலத்தை திரித்தும் புரட்டியும் பிழைக்கும் தம் நக்குத்தனத்தைத்தான், ஊடகக் கிரிமினல்கள் தமது 'ஊடாக சுதந்திரம்" என்கின்றனர். இதையே அவர்கள் 'ஊடக ஜனநாயகம்" என்கின்றனர். நிலவும் எல்லா பாசிசத்தையும் மிதமிஞ்சிய வக்கிரத்துடன், அதை தம் பங்குக்கு மக்களின் மேல் அள்ளிக்கொட்டிக் கொண்டு, தம்மைத் தாம் தம்பட்டம் அடிக்கின்ற பிழைப்புவாதக் கூட்டம் தான் இந்தக் கிரிமினல்கள்.. மேலும்........
Updated 24-11-08
 
 
ஊடகங்களில் முஸ்லீம்கள்
ச.பாலமுருகன்
இவ்வருட சுதந்திர தினத்தின்போது, இந்நாட்டின் தேசிய கொடியை மரியாதை செய்ய பாபுலர் பிரண்ட் என்ற அமைப்பினர் முஸ்லீம்கள் சுதந்திர தின விழா கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர். முஸ்லிம்களின் இச்சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு தமிழக அரசு அனுமதி மறுத்திருந்தது. இறுதியில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அனுமதி பெற்றே சுதந்திர தினத்தை முஸ்லிம்கள் கொண்டாட முடிந்தது.
மதத்தின் பெயரால் வேறுபாடு காட்டுவது அரசுக்கு நியாயமானதல்ல. ஆனால் நமது சமூகத்தில் உருவாகியுள்ள பகைமை உணர்வு முஸ்லிம்களின் சுதந்திர தின விழாவைக் கூட தடுக்கும் வகையில் வளர்ந்துள்ளது. மேலும்........
Updated 26-10-08
 
 
பிரச்சாரக் கூற்று
நாம் இன்று எங்கும் வன்முறையையே காண்கின்றோம். குறிப்பாக பொதுமக்கள், பெண்கள், சிறுவர்கள், ஏழைகள், சிறுபான்மையினர், ஊடகவியளாளர்களுக்கெதிராகவும் மற்றும் சூழலுக்கெதிராகவும் கூட வன்முறைகள் இடம்பெறுவதைக் காண்கின்றோம். இலங்கையராகிய நாம் இவ்வகையான கொடூரங்களுக்கு மத்தியில் செயலற்றிருக்கின்றோம். முதலில் செயலில் இறங்கவேண்டிய பொறுப்பு எம்முடையதாக இருக்க, நாம் ஏன் மற்றவர்களை எதிர்பார்கின்றோம்? மேலும்........
Updated 10-10-08
 
5 July 2009
இன்றைய பதிவுகள்
 
விமர்சன தலைப்புக்கள்

 

 

 

 

 

 
இந்து பயங்கரவாதமே இஸ்லாமிய பயங்கரவாதமாகின்றது

பம்பாய் தாக்குதலை வைத்து ஒப்பாரி வைக்கின்றனர். மனிதத் தன்மை பற்றி பேசுகின்றனர். ஆளும் வர்க்கங்கள் தம் அடக்கமுறை கருவிகளை எப்படி பலப்படுத்துவது என்று, கூச்சல் போடுகின்றனர். உலக கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள் எல்லாம் 'பயங்கரவாதம் பற்றி" வழமையான ஒப்பாரி வைக்கின்றனர். 'சுதந்திர" செய்தி ஊடகங்கள் இஸ்லாமிய 'பயங்கரவாதம்" என்று மூளைச்சலவை செய்கின்றன.
அறிவு, நேர்மை என எதும் கிடையாத கும்பல்கள் எல்லாம் கொக்கரிக்கின்றது. ஐயோ என்று ஓப்பாரிவைக்கின்றது.
ஒரு மருத்துவர் நோய் வரக் காரணம் என்னவென்று ஆராய்ந்து, அதற்கு தான் மருந்து கொடுத்து அந்த நோயைக் சுகப்படுத்துகின்றனர். இன்று 'பயங்கரவாதம்" என்ற சமூக நோயைக் குணப்படுத்த வேண்டும் என்றால், இதற்கான காரணத்தை கண்டறிந்து அதை குணப்படுத்த வேண்டும். மேலும்........

Updated 21-10-08
 
   
     
Untitled Document
Copyright © 2008 Vimarsanam. All rights reserved.